Published : 09 Mar 2025 07:03 AM
Last Updated : 09 Mar 2025 07:03 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மார்ச் 1 அன்று கடலூரில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் ஏராளமான வாசகியர் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள புனித அன்னாள் பள்ளி (சிபிஎஸ்இ) வளாகத்தில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் பேசிய கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தீபா, “சர்வதேச மகளிர் நாளைக் கொண்டாட ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைச் சொல்வார்கள். இந்த ஆண்டு பெண்கள் சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் பெண்கள் தங்களுக்கென்று சேமிக்கத் தொடங்க வேண்டும். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. எனவே, குடும்பத்தில் ஆண் பிள்ளையை ஒரு மாதிரியாகவும் பெண் பிள்ளையை ஒரு மாதிரியாகவும் வளர்க்கக் கூடாது” என்றார். தன் பேச்சுக்கு நடுவில் கவிதைகளைச் சொல்லியும் பாடல்களைப் பாடியும் வாசகியரைக் கவர்ந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் சித்தியை மேடைக்கு அழைத்துப் பெருமிதப்படுத்தியது வாசகியரை நெகிழச் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT