Last Updated : 29 Sep, 2024 07:45 AM

 

Published : 29 Sep 2024 07:45 AM
Last Updated : 29 Sep 2024 07:45 AM

ப்ரீமியம்
ஒளிந்திருக்கும் பெண்களின் பிளாஸ்டிக் வாழ்க்கை | உரையாடும் மழைத்துளி - 2

நம் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு பாரம்பரியமான சித்திரம் ஒன்று உண்டு. குறிப்பாக, அதில் கதாபாத்திரங்களாக வரக்கூடிய பெண்கள் சம்பந்தமானதுதான் அது. தமிழ் சினிமாவில் உள்ள பெண்கள் எல்லாருமே திருமணத்திற்குப் பின்பு சேலை அணிபவர்களாகவும் அதற்கு முன்பாக அவர்கள் மாடர்ன் உடைகளை அணிபவர்களாகவும் காட்டப்படுவார்கள். அதே போல அவர்கள் மெல்லிய குரலில் பேசி குடும்பத்தில் ஒரு தியாகியாகவே வலம்வருவார்கள்.

பெண்கள் பொதுவாகவே மென்மை யானவர்கள், காதலன் அல்லது கணவன் சத்தம் போடும்போது அழுவார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். தங்கள் குடும்ப கௌரவத்தை நினைத்துச் சமூகத்தில் மிகக் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். காதலால் கசிந்துருகுவார்கள்... இவை எல்லாமேதான் இங்கு தமிழ்ப் பெண்களுக்கான அடையாளம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x