Published : 08 Nov 2025 06:59 AM
Last Updated : 08 Nov 2025 06:59 AM

ப்ரீமியம்
உயிரைக் காக்கும் தடுப்பூசிகள்! | நவம்பர் 10: உலக நோய்த்தடுப்பு தினம்

‘வரும்முன் காப்பது நல்லது’ எனச் சொல்வார்கள். நோய் வந்த பிறகு குணப்படுத்துவதற்குப் போராடுவதைவிட, நோய் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதேநேரத்தில் நம்மைப் பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றுபவை தடுப்பூசிகள். தடுப்பூசி என்பது மனித உடலில் நோய்
எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் அற்புதமான மருத்துவக் கண்டுபிடிப்பு. காசநோய், டிப்தீரியா, பெர்டுஸிஸ், ரண ஜன்னி, போலியோ, மஞ்சள் காமாலை போன்ற பல உயிர்க்கொல்லி நோய்களைத் தடுப்பதில் இது முக்கியப் பங்காற்றுகிறது.

இந்திய அரசு ‘பல்ஸ் போலியோ திட்டம்’ என்கிற பெயரில் 1995இல் தொடங்கிய திட்டம், இன்று இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்றியுள்ளது. தற்போது நாடு முழுவதும் ‘மிஷன் இந்திர தனுஷ்’ திட்டத்தின்கீழ் ஒவ்வொரு குழந்தைக் கும் 12 முக்கிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசியை அரசு அளிக்கிறது அவை: பிசிஜி (காசநோய்க்கு), டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி), ஓபிவி/ஐபிவி (இளம்பிள்ளை வாதம்), எம்.ஆர். (தட்டம்மை, ருபெல்லா), ஜெஇ தடுப்பூசி (ஜப்பான் என்செபலைட்டிஸ்).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x