Published : 12 Jul 2025 07:00 AM
Last Updated : 12 Jul 2025 07:00 AM
கண் மருத்துவத்தில் நோயாளிகளிடையே காணப்படும் அறியாமை பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. கண்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத பலரும் தீவிரமான கண் பாதிப்புகளில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன.
சீதாப்பழ விதைகளும் கண் பாதிப்பும்: தாங்கிக்கொள்ள முடியாத கண் வலி - சிவந்த கண்களுடன் கண்களைத் திறந்தாலே அழுகின்ற இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கண் மருத்துவமனைக்குத் தாய் ஒருவர் வந்தார். அந்தக் குழந்தைகளைப் பரிசோதித்த கண் மருத்துவர், அவர்களது கண்ணின் வெள்ளைப் படலம் (Conjunctiva), கருவிழி (Cornea) வீங்கி இருப்பதைக் கண்டறிந் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT