Published : 01 Mar 2025 06:40 AM
Last Updated : 01 Mar 2025 06:40 AM
குடிப்பழக்கப் பிரச்சினையிலிருந்து துப்புரவாக மீள்வது என்பது பலருக்கும் சாத்திய மற்றதாகவே இருக்கிறது. விளக்கின் வெளிச்சம் விட்டில் பூச்சிகளை வீழ்த்துவதுபோல் மதுவின் மயக்கம் மனிதர்களை வீழ்த்துகிறது.
“இன்றிலிருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டுப் புது வாழ்க்கை வாழப்போகிறேன்; பிறந்த நாள் ‘பார்ட்டி’ யோடு ‘குவார்ட்ட’ருக்கு குட்பை!” என்றெல்லாம் குடிநோயாளிகள் சபதம் எடுப்பார்கள். ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலைகள் மாறும்போது, மறுபடி சபலம் தட்டும். இன்றைக்கும் மட்டும் ஒரு ‘கட்டிங்’ என்று ஆரம்பிப்பார்கள். அப்புறம், குடிபோதையை நோக்கி மாரத்தான் ஓட்டம் ஓடுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT