Last Updated : 12 Apr, 2022 05:11 PM

 

Published : 12 Apr 2022 05:11 PM
Last Updated : 12 Apr 2022 05:11 PM

ப்ரீமியம்
உக்ரைன் அகதிகளுக்காக ஒரு செயலி.. இந்திய மாணவர் அசத்தல்!

இன்று எல்லாவற்றுக்கும் மொபைல் செயலிகள் வந்துவிட்டன. அணிவகுக்கும் செயலிகளுக்கு மத்தியில் அகதிகளுக்கான செயலியும் வந்துவிட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் இந்தச் செயலியை இந்திய மாணவர் ஒருவர் உருவாக்கி காட்டியிருக்கிறார்.

போரே நடக்கக் கூடாது என்ற நாகரிகக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மனித குலத்தின் எண்ணங்களுக்கு அப்பால் சில தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளால் போர்கள் துரதிர்ஷ்டவசமாக நடைபெறவும் செய்கின்றன. அந்த வகையில் பிப்ரவரி 24 அன்று ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. போர் தொடங்கி ஒன்றை மாதத்தைக் கடந்த பிறகும், அது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாமல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x