Published : 23 Oct 2015 12:08 PM
Last Updated : 23 Oct 2015 12:08 PM

நெட் ‘அபேஸ் !- பரீட்சை எழுதும்போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...???

பரீட்சை எழுதும் போது பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா...???

*முதலில் இடது, வலது பக்கம் நோட்டம் இடுவார்கள். தெரிந்தவர்கள் இருந்தால் அழகாக நகைப்பார்கள்.

*எழுதும்போது இயல்பாய் விழும் முடியை எடுத்து காதுகளுக்குப் பின்னால் விடுவது.

*நகம் கடிப்பார்கள். ஓரக்கண்ணால் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவார்கள்.

*தெரியாத கேள்விக்கு யோசனை செய்யும் போது கழுத்தில் உள்ள சிறிய செயினை இடது கையின் ஆள்காட்டி விரலால் நோண்டுவார்கள்.

*மீண்டும் வேறொரு விடை தான் என்றாலும் இடத்தை நிரப்புவதுக்காக எழுதுவது.

*அடிக்கடி பேனாவை அழகான உதட்டில் வைத்து உரசுவது.

*தெரியாத கேள்விக்கெல்லாம் தைரியமாக வேறொரு விடை எழுத கூடுதலாய் பேப்பர் கேட்டு பிற பெண்களை ஆச்சர்யப்படுத்துவது.

*மாலா அல்லது சரோஜா கண்ணாலே எப்படிடி எழுதுற என்று கேட்க உதட்டை பிதுக்கிக் காட்டுவது.

பசங்க என்ன செய்வாங்கன்னு பார்ப்போம்.!

*எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னு எண்ணுவது.

*தெரிந்த பையங்ககிட்ட உன் பக்கத்துல உக்காந்திருக்கிற பிகரு சூப்பரு என்று ஜாடை காட்டுவது

*கேள்வித்தாளை 18-வது முறையா சீரியஸா படிக்கிறது

*நேற்று ஜெயபாலிடம் பேசிய பேச்சை நினைத்து பார்ப்பது -காசினோ தியேட்டர்ல என்ன படம் போடுவான்னு யோசிப்பது.

*தெரிந்த கேள்விக்கு விடை வேகமாய் எழுதுவது

*ஷ்..சு... கொஞ்சம் பேப்பரத் தூக்கி காட்டுன்னு முன்னாடி உள்ள முதுகுக்கு சிக்னல் கொடுப்பது

*கர்சீப் எடுத்து முகத்தைத் துடைத்துக்கொள்வது

*அடிக்கடி டைம் பார்ப்பது.

(இந்தக் கட்டுரை ட்விட்டரில் ராதா இல்லா படம் சாதா! @RATHA_RADHA என்பவரிடமிருந்து சுடப்பட்டது).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x