Published : 13 Jun 2025 07:25 AM
Last Updated : 13 Jun 2025 07:25 AM
அதே வீடு, அதே வேலை, அதே சாப்பாடு, அதே மக்கள். இதையெல்லாம் சொல்லும்போது சலிப்பாக இருக்கலாம். பழைய உலகமாகவே இருந்தாலும் புதிய ரசனை ஒன்றை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, பழையதும் புதிதாகி விடுகிறது. இது வாழ்க்கையின் மற்றுமொரு சீக்ரெட் ரெசிபி.
நூல்கள் மூலமாக பல நாடுகளுக்கு கற்பனையில் நான் பயணித்திருக்கிறேன். கரோனா காலத்தில் பொதுமுடக்கம் காரணமாகப் பக்கத்து தெருவுக்குப் போவதற்கே தடை இருந்தபோது ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, லண்டன் எனப் பல நாடுகளுக்குக் கற்பனையில் போய்வருவது என்றால் சும்மாவா! புதிய ஊருக்குச் சென்று புதிய மனிதர்கள், புதிய தெருக்களைப் பார்ப்பதைவிட, பழைய மனிதர்கள், பழகிய தெருக்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது சிறந்தது இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT