Published : 30 May 2025 07:43 AM
Last Updated : 30 May 2025 07:43 AM
பணக்காரர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதை நேரில் பார்த்ததைவிட திரைப்படங்களில்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். பணக்காரர்களை எதிரியாக்கி வசனங்கள் பேசுகிற பெரும்பாலான நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் பெரும் பணக்காரர்கள்தான்.
‘கழுத்து வரைக்கும் காசு இருந்தா, அதுதான் உனக்கு எஜமானன்!’ எனப் பாடல் வரிகள் மூலமாக ஓவர் காசு உடம்புக்கு ஆகாது என்று நமக்குக் கருத்துச் சொல்வது பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஏழைகள்தான்! இப்படிப் பணக்காரர்கள் மீதும் பணம் மீதும் ‘அந்தப் பழம் புளிக்கும்’ மாதிரியான எண்ணங்களோடு இருப்பவர்களிடம் பணம் எப்படி வந்துசேரும்?
நாம் மதிக்காத, விரும்பாத விஷயங்களை நோக்கி நம் மனம் எப்படிப் பயணிக்காதோ, அதே போலதான் பணமும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT