Published : 15 Jun 2025 08:20 AM
Last Updated : 15 Jun 2025 08:20 AM
பான் இந்திய சினிமா என்கிற பெயரில், 5 மொழிகளில் பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கி வசூல் பெறுவதே இன்றைய போக்கு. ஆனால், அவை, மாநில அளவில் கலாச்சார வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங் களைக் கொண்டிருப்பதில்லை. அண்டை மாநில சினிமாவாக இருந்தாலும் தெலுங்கு சினிமா ரசனையை, தமிழ் ரசனையுடன் ஒப்பிடவே முடியாது. பாடல்கள், சண்டைக்காட்சிகள், கதாபாத்திர அணுகுமுறை, க்ளைமாக்ஸ் எனப்பலவற்றில் இருமொழிப் படங்களும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. ‘குஷி’ படத்தைத் தமிழில் இயக்கி வெற்றி கொடுத்த கையோடு, அதே தயாரிப்பாளருக்காக அதன் தெலுங்குப் பதிப்பை மறுஆக்கம் செய்தார் எஸ்.ஜே.சூர்யா. அதில் நாயக னாக நடித்தவர் இன்றைய ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண். தமிழ், தெலுங்கு பதிப்புகளில் தான் கையாண்ட மாற்றங்கள் பற்றிய மனப்பதிவை இந்த அத்தியாயத்தில் பகிர்ந்திருக் கிறார் எஸ்.ஜே.சூர்யா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT