Published : 08 Jun 2025 08:53 AM
Last Updated : 08 Jun 2025 08:53 AM
‘நடிப்பு அரக்கன்’ என்று ரசிகர்களால் இன்று கொண்டாடப் பட்டு வந்தாலும், ‘இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா’வுக்காக ரசிகர்கள் காத்திருக்கவே செய்கிறார்கள். மிரட்டும்வில்லன் - கதாநாயகன் என மாறி மாறிப் பயணப்பட்டு வரும் அவர், ‘கில்லர்’ என்கிற படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார். அப்படிப்பட்டவர், தன்னுடைய ‘குஷி’ படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி களில் இயக்கிச் சாதனைப் படைத்தவர். ‘குஷி’ உருவான நாள்கள் பற்றி இந்த வாரமும் அவருடைய மனப்பதிவுகள் இதோ: “பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, மதுரையில் இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைத்தது. நான் பி.ஈ. சேரவில்லை. சென்னையில் தங்கியிருந்து திரைப்பட இயக்குநர்களைச் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவே சென்னை வந்து லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்து படித்துப் பட்டம்பெற்றேன். ஆறு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, வசந்த் சாய் சாரிடம் உதவி இயக்குநராக, அஜித் நடித்த ‘ஆசை' படத்தில் பணியாற்றினேன். அவர்தான் செல்வராஜ் ஜஸ்டின் என்கிற என் பெயரை எஸ்.ஜே.சூர்யா என்று மாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT