Published : 11 Apr 2025 06:57 AM
Last Updated : 11 Apr 2025 06:57 AM

ப்ரீமியம்
கலையைப் பின்தள்ளும் இச்சை | திரைசொல்லி 23

அற்புதமான திரைக் காவியமான ‘சலங்கை ஒலி’ படத்தில் காட்சி யொன்று வரும். பாலு (கமல் ஹாசன்) ஒரு திறமை வாய்ந்த குச்சுப்புடி நடனக் கலைஞன். ‘வான் போலே வண்ணம்கொண்டு வந்தாய் கோபாலனே’ என்கிற பாடலின்வழி ஒரு திரைப்படத்தில் நடிக்க அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அப்பாடலைப் படம்பிடிக்கும் கோமாளித் தனமான இயக்குநர் ஒருவர், பாடலின் இதமான இசையொலிக்குச் சற்றும் தொடர்பில்லாத மலினமான நடன அசைவுகளை ஆடச்சொல்வார். பாலு விருப்ப மில்லாமல் ஆடிவிட்டு கண்கள் கசிய விசனத்தோடு நிற்பான். இப்பாடல் காட்சியை ஒரு திரைப்படமாக விரித்து எடுத்தோமெனில், அது கடந்த ஆண்டு மொராக்கோ நாட்டிலிருந்து வெளியான ‘அனைவரும் தூதாவை நேசிக்கிறார்கள்’ (Everybody Loves Touda) என்கிற படம்போல் உருவெடுக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x