Published : 28 Mar 2025 06:54 AM
Last Updated : 28 Mar 2025 06:54 AM
நாடகமும் திரைப்படமும் பின்னிப் பிணைந் திருக்கும் இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கம் செலுத்திய திரைப்படங்கள் பல. அவற்றில் ‘ரத்தக் கண்ணீர்’ தனியிடம் பிடித்தது. அதை முதலில் நாடகமாகவும் பின்னர் திரைக்காகவும் எழுதியவர் திருவாரூர் கே.தங்கராசு. ‘ரத்தக் கண்ணீர்’ படத்தின் வெற்றியால் திரையுலகம் அவரைத் திரும்பத் திரும்ப விரும்பி அழைத்த போதும் அதைப் புறக்கணித்து, பெரியாரின் பெருந்தொண்டராக, பகுத்தறிவுச் சுடராக, இதழாளராக 88 வயது வரையிலும் களமாடியவர்.
பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், திராவிடர் கழகத்தின் முன் வரிசைத் தலைவர் எனப் பல தளங்களில் தன் தீவிரப் பங்களிப்பை நல்கிச் சென்றிருக்கும் இவரின் நூற்றாண்டு 06.04.25 இல் தொடங்குகிறது. அதையொட்டி அவரின் நிழலாக 40 ஆண்டுகள் உடன் பயணித்தவர் அவருடைய மருமகன் ஆர்.பிரசாத். அவரும் அவரின் மனைவியும் தங்கராசுவின் மகளுமான மண்டோதரி பிரசாத்தும் இணைந்து இந்து தமிழ் திசைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் ஒரு பகுதி:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT