Published : 28 Mar 2025 06:43 AM
Last Updated : 28 Mar 2025 06:43 AM
தூய்மையான காதல் என்பது உள்ளத்தில் தொடங்கி உடலின் தேவையைக் கடந்து மீண்டும் உள்ளத்தில் அழுத்தமாக நிலைகொள்வது. இத்தகைய குணங்களைத் தன்னகம் கொண்ட மனிதர்களைப் பிரதி பலிக்கும் கதாபாத்திரங்கள்தான் காதலைக் காவியமாக்கி நமது பார்வைக்குப் பரிசாகத் தருபவை. இதற்கு ‘தேவதாஸ்’ திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு பண்பட்ட எடுத்துக்காட்டு.
உலக சினிமாவிலும் இளம் வயது தொட்டு முதுமைப் பருவம் வரை நீடிக்கும் காதல் காவியங்கள் நிறையவே புனையப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்திய, தமிழ் சினிமா கையாண்ட மிகை உணர்ச்சி சித்திரிப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT