Published : 16 Mar 2025 07:38 AM
Last Updated : 16 Mar 2025 07:38 AM
கடந்த 50 ஆண்டுகளில் 75 படங்களை இயக்கிச் சாதனை படைத்திருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தனது பெரும்பாலான படங்களில் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்ததால், ‘புரட்சி இயக்குநர்’ என்று கொண்டாடப் படுபவர். அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் ‘கோபக்கார இளைஞன்’ கதாபாத்திரங்களின் வழியாக விஜயகாந்தைத் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக்கினார். ‘நடிகனாக வேண்டும்’ என்கிற தன்னுடைய மகன் விஜயின் விருப்பத்தை முதலில் ஏற்க மறுத்தவர், பின்னர் அவரது உறுதியைப் பார்த்து, கல்லூரி மாணவனாக இருந்த அவரைத் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தார். விஜயைத் திரையில் உருவாக்கிய காலத்தில், மகனுக்காக இயக்கிய ஒரு சில படங்களைக் குறிப்பிட்டு இவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதையெல்லாம் சட்டை செய்யாமல் திரையுலகில் விஜயை நடை பழக்கி, அவரை மக்களின் நாயகனாக உயர்த்திய நாள்களை ப்ரியமுடன் இங்கே பகிர்ந்துள்ளார்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT