Published : 02 Feb 2025 07:35 AM
Last Updated : 02 Feb 2025 07:35 AM
ஈரம் வற்றாத கீழ தஞ்சையின் கோயில் நகரமான குடந்தைக்கு அருகருகில் அமைந்துள்ள இரண்டு ஊர்கள் நல்லமாங்குடி - கயத்தூர். தமிழ் சினிமாவுக்குப் புத்தொளி பாய்ச்சிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்து, வளர்ந்தது நல்லமாங்குடி என்றால், காதலை திரை வெளியில் கௌரவம் செய்த இயக்குநர் எஸ்.எழில் பிறந்து, வளர்ந்தது கயத்தூர். எழில் எழுதி, இயக்கி 1999இல் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய்க்கொரு ஜாக்பாட் திரைப்படம். அதுவரை பல காதல் கதைகளில் நடித்திருந்தாலும், விஜயை ஒரு காவியக் கதாநாயகன் ஆக்கியது, கதையும் இசையும் பின்னிப் பிணைந்திருந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT