Last Updated : 19 Apr, 2024 06:25 AM

 

Published : 19 Apr 2024 06:25 AM
Last Updated : 19 Apr 2024 06:25 AM

ப்ரீமியம்
நடிப்பு - நடனத்தில் சாதித்த நட்சத்திரம்! | குமாரி ருக்மணி 95 வது பிறந்த நாள்

‘முல்லைவனம்’ படத்தில்... | படங்கள் உதவி: ஞானம் |

தஞ்சாவூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மெலட்டூர் கிராமம். பாகவதக் கதையை ‘பாகவத மேளா’ என்கிற பெயரில், இசை, நடன நாடகமாக, அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்து இன்றைக்கும் அங்கே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு புகழ் பெற்ற ஊரிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்றவர்கள் பலருண்டு. அவர்களில், அடையாளம் என்பதைத் தாண்டி நட்சத்திரமாகப் புகழ் பெற்றவர் குமாரி ருக்மணி.

மெலட்டூர் என்றால் ‘பாகவத மேளா’ என்று குறிப்பிடும் பலரும் ‘மெலட்டூர் பாணி பரத நாட்டியம்’ பற்றிப் பேசுவ தில்லை. அதை உருவாக்கியவர் மாங்குடி துரைராஜன். மெலட்டூர் பாணி பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்று, தமிழ் சினிமா பேசத் தொடங்கியிருந்த கால கட்டத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் பெற்றவர், பின்னாளில் ‘நுங்கம்பாக்கம் ஜானகி’ என்று அழைக்கப்பட்ட குமாரி ருக்மணியுடைய தாயார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x