Published : 06 Nov 2025 07:36 AM
Last Updated : 06 Nov 2025 07:36 AM
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகிலுள்ள குணங்குடி என்ற கிராமத்தில் 1792-ம் ஆண்டு மஸ்தான் சாகிப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் என்பதாகும். இளம்வயது முதலே ஆன்மிக தாக்கம் கொண்ட இவர் கீழக்கரை தைக்கா சாகிப் ஒலியுல்லாஹ் என்கிற செய்கு அப்துல் காதிரிடம் சென்று இஸ்லாமிய மார்க்க கல்வியும் காதிரிய்யா தரீக்காவின் ஞானநெறி முறைகளையும் கற்றுணர்ந்து தெளிந்தார்.
மஸ்த் என்றால் போதை, இவர் இறைக்காதலின் போதையில், லயித்து இருந்ததால் இவரை எல்லோரும் ‘மஸ்தான்’ என்றே அழைத்தனர். திரிச்சிராபுரம் மவ்லவி ஷாம் சாகிபிடமும் இவர் ஞானதீட்சை பெற்றார். இவர் திருமணத்தை தவிர்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT