Published : 30 Oct 2025 07:54 AM
Last Updated : 30 Oct 2025 07:54 AM
இராமாயணத்தின் தொடக்கத்தில் குணவான், வீர்யவான், வித்வான், பிரிய தர்சனன், ஆத்மவான், புத்திமான், நீதிமான், ஸ்ரீமான், புகழ்மிக்கவர், நல்லியல்புகள் கொண்டவர், அனைவராலும் நேசிக்கப்படுபவர் என்று இராமபிரான் அறிமுகப்படுத்தப்படுகிறார். வால்மீகி இராமாயணத்தின் தொடக்க அத்தியாயங்கள், வால்மீகி முனிவரைப் பற்றியும், அவருக்கு நாரதர் உபதேசித்த இராம குணங்களைப் பற்றியும், கிரௌஞ்சம் வீழ்வதைக் கண்ட அவருடைய வாயிலிருந்து வெளிப் போந்த ‘முதல்’ ஸ்லோகம் பற்றியும் கூறுகின்றன. இந்த அத்தியாயங்களை வால்மீகி முனிவரே இயற்றியிருக்க முடியாது; அவருடைய சீடர்கள் யாரேனும் சேர்த்திருக்கக் கூடும் (மகாபாரதத்தில், வியாசர் உரைத்ததை அவருடைய சீடர் வைசம்பாயனர் எடுத்து விளக்குகிறார்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT