Published : 09 Oct 2025 06:53 AM
Last Updated : 09 Oct 2025 06:53 AM
விராலிமலையில் ஒரு சிறிய வீட்டில் வெளியுலகத்தால் அறியப்படாத இந்தியாவின் கடைசி சதிராட்ட கலைஞர் முத்து கண்ணம்மாள் வசித்து வருகிறார். வயது 88. கலைத்துறையில் முத்து கண்ணம்மாள் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவை செய்த 38 தேவரடியார்களில் இவர் ஒருவர்தான் கடைசி தலைமுறையில் உயிரோடு இருப்பவர். இந்திய அரசின் ஃபிலிம் டிவிஷன் முத்துக்கண்ணம்மாளின் முழுநீள வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்குநர் சண்முகநாதன் மற்றும் எடிட்டர் பி.லெனின் ஆகியோரைக் கொண்டு வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT