Published : 11 Sep 2025 07:53 AM
Last Updated : 11 Sep 2025 07:53 AM
உலகத் தரத்துக்கு நிகரான கலாச்சாரம், நாகரீகம், கட்டிடக்கலை ஆகியவற்றில் தமிழர்கள் உயர்ந்து நிற்கின்றனர். அதை பறைசாற்றும் விதமாக கிபி 7-ம் நூற்றாண்டில், நின்ற சீர் நெடுமாறன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட (தென்காசி மாவட்டம்) திருமலாபுரம் பாசுபதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
பல்லவர் குடவரைக் கோயிலுக்கு மாறுபட்ட முறையில் பாண்டியன் குடவரைக் கோயிலில் சதுர வடிவ ஆவுடையாருடன் லிங்கேஸ்வர மூர்த்தி பாறையிலேயே வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நின்றசீர் நெடுமாறனின் இயற்பெயர் சேந்தன் மாறன். மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் இவரது பெயரால் அமைந்த சேர்ந்தமரம் என்ற ஊருக்கு 2 கிமீ தொலைவில் திருமலாபுரத்தில் இக்கோயில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT