Published : 31 Jul 2025 07:23 AM
Last Updated : 31 Jul 2025 07:23 AM
மகளிர் மீது செலுத்த வேண்டிய கண்ணியம் குறித்து நபிகளார் சிறந்த வழிகாட்டுதலைக் கூறியுள்ளார். இதை ஒவ்வொருவரும் கடைபிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒரு நீக்ரோ அடிமை பெண்மணி அடிக்கடி வந்து, இருவரும் பேசிக் கொண்டிருப்பர். சிறு சிறு வேலைகளில் உதவிகரமாக இருப்பார்.
அவ்வப்போது தனக்கு மகிழ்ச்சி ஏற்படும் நேரத்தில் அல்லது மகிழ்ச்சியான செய்தி வரும் நேரத்தில் கவிதை ஒன்றை வாசிப்பார். ‘அந்த கழுத்து ஆடைக்குரிய நாள், என் இறைவனின் அற்புதங்களில் ஒன்று அல்லவா, அவன் என்னை இறை மறுப்பின் ஊரிலிருந்து வெளியாக்கி ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளச் செய்த நாளல்லவா அது !’ என்ற கவிதையை அடிக்கடி வாசிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT