Published : 17 Jul 2025 07:13 AM
Last Updated : 17 Jul 2025 07:13 AM
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று அம்சங்களிலும் தனித்துவமிக்க தலமாகத் திகழ்வது பரியா மருதுபட்டி. பொன்னமராவதி நகரின் தெற்கே 4 கிமீ தொலைவில், அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு, ஸ்ரீநரசிம்மர் அவதாரம் எடுத்து இரணிய சம்ஹாரம் செய்து முடித்தார்.
மிக உக்கிரமாகத் தோன்றிய நரசிம்மரை அடக்கி சாந்தம் அடைய திருவுளம் கொண்ட சர்வேஸ்வரன் பாதி உடல் மிருகமாகவும், பாதி உடல் பட்சியாகவும், இறக்கையுடன், 8 கால்களுடன் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து நரசிம்மரின் உக்கிரம் தணித்து அவரை சாந்தமூர்த்தியாக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT