Published : 10 Jul 2025 07:54 AM
Last Updated : 10 Jul 2025 07:54 AM
உலக உயிர்கள் பயனடையும்படி வாழ்வதே நம் பாரத கலாச்சாரத்தின் உயிர் மூச்சு. நோயற்ற ஆரோக்கிய வாழ்வு, வலிமையான உடல், நீண்ட ஆயுள், ஊக்கம் இவற்றோடு பிறர்க்கு உதவி செய்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ணி செயல்படுவதே நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொள்ளும் வழி ஆகும்.
அசுர குல அரசனான ஹிரண்யகசிபுவின் மகன் பக்த பிரகலாதன் பல துன்பங்கள், கஷ்டம், கடும் வேதனை, சித்ரவதைகளை அனுபவித்தபின், தூணிலிருந்து நரசிம்ம [ நர – மனித உடல், சிம்ம – சிங்க முகம் ] அவதாரமாக கடவுள் தோன்றி ஹிரண்யகசிபுவை அழித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT