Published : 03 Jul 2025 07:25 AM
Last Updated : 03 Jul 2025 07:25 AM
சிகண்டி பூரணம் எனும் பெரிய ஆலய மணியின் தெய்வீக ஓசையுடன், சிவனாடியார்கள் சங்கை ஊத, தில்லை வாழ் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்களகரமான சூழ்நிலையில் கனக சபையில் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம், ஆராதனை நடப்பதை கண்குளிர கண்டு களிப்பது என்பது வாழ்நாளில் ஓர் வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இறைவனுடன் ஆழ்நிலையில் ஒன்றி, உடல் சிலிர்க்க, ஒரு வகையான தெய்வீக அதிர்வலை ஏற்படுவதை அனுபவத்தால் மட்டுமே நிச்சயம் உணர முடியும். இதைத்தான் மாணிக்கவாசகர் ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ எனப் பாடினார் போலும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT