Published : 12 Jun 2025 07:24 AM
Last Updated : 12 Jun 2025 07:24 AM
சுயநலம் துறந்து பிறருக்கு உதவுபவர்கள் மேன்மக்கள் என இதிகாச புராணங்கள் புகழ்கின்றன. அத்தகைய மேன்மக்களின் நல்லொழுக்கமே மனித குலத்தின் இப்போதைய தேவையாக உள்ளது. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இதை உணர்ந்து கொண்டால், ஒருவர் எதுவாக மாற விரும்புகிறாரோ, அதுவாகவே ஆகி அதற்குள் ஊடுருவ முடியும்.
என்றும் மாறாத இந்த விதியே ஆன்மிக வாழ்வின் அடித்தளம். இந்த உறுதியான எண்ணம் மட்டுமே மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் படிநிலையில், ஆன்மிக வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாற்றம் படிப்படியாக மற்றும் உறுதியாக நம்முள் நிகழ்ந்தால் – மனம், இதயம், உணர்வு, எண்ணம், சிந்தனை இவற்றில் ஆன்மிக முன்னேற்றம் இயல்பாக நிகழும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT