Last Updated : 29 May, 2025 07:23 AM

 

Published : 29 May 2025 07:23 AM
Last Updated : 29 May 2025 07:23 AM

ப்ரீமியம்
சமுத்திர மந்தனாவும் அமிர்த சிதறல்களும்

பிரயாக்ராஜ்

சமுத்திர மந்தனா என்பது பாற்கடலைக் கடையும் சம்பவத்தை விளக்கும் புராணக் கதையாகும். தேவர்கள் மற்றும் அசுரர்கள் இணைந்து, பாற்கடலைக் கடைந்து, அதில் இருந்து அமிர்தம் (நித்திய வாழ்வின் அமுதம்) உள்ளிட்ட விலை மதிப்பற்ற பொருட்கள் கிடைக்கப் பெற்றனர். நித்திய ஜீவித அமுதம் பற்றி கூறும் விஷ்ணு புராணத்தில் அசுரர்களின் பேராசையும், தேவர்களின் விருப்பமும் விளக்கப்பட்டுள்ளன.

ஒரு சமயம் இந்திரன் தனது யானையின் மீது பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது துர்வாசர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். அப்சரஸ்கள் தனக்கு அளித்த மாலையை, துர்வாச முனிவர், இந்திரனிடம் அளித்து அணிந்து கொள்ளச் சொன்னார். சற்று நேரம் மாலையை அணிந்து கொண்ட இந்திரன், அதை தனது யானைக்கு அணிவித்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x