Published : 22 May 2025 07:56 AM
Last Updated : 22 May 2025 07:56 AM
ஒருவரது எண்ணங்களே அவரை பக்குவப்படுத்தும் கருவியாக உள்ளது. இந்த எண்ணங்களால் ஒருவரை வாழ்வின் உயரத்துக்கு கொண்டு முடியும். படுகுழியில் தள்ளவும் முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், நாம் நம்மை சுய சோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒருவரை நீங்கள் யார் என்று கேட்டால், அவர் தன் பெயர், வயது, கல்வித் தகுதி, பதவி, நாடு உள்ளிட்ட தகவல்களை தெரிவிப்பார். இவை அனைத்தும் மாற்றத்துக்கு உட்பட்டது. மகிழ்ச்சியானவன் அல்லது மகிழ்ச்சியற்றவன் என்றும் சொல்ல முடியாது. இன்பம் - துன்பம் ஆகிய இரண்டும் கலந்த கலவையான அனுபவங்களைக் கொண்டவனா என்றும் புரியவில்லை. நம்மைப் பற்றிய குழப்பம் இருப்பதால் இந்த நிலைக்கு ஆளாகிறோம். காரணம் சுயசந்தேகம். மனநிலைக்கேற்ப மாறுவதே இதற்கு காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT