Published : 24 Apr 2025 06:57 AM
Last Updated : 24 Apr 2025 06:57 AM
திருச்சி மாவட்டம், தொட்டியம் அனலாடீஸ்வரர் கோயில், தீராத நோய்கள் தீர்க்கும் திருத்தலமாக போற்றப்படுகிறது. வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் 3 அரக்கர்களும் தாரகாசுரனின் புதல்வர்கள் ஆவர்.
முன்னொரு காலத்தில் இவர்கள் மூவரும் அரிதினும் அரிதான வரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தனர். மூவரும் தங்களுக்கு பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காவல் மிக்க அரணில் தங்கி வானவீதி எங்கும் சஞ்சரித்து உலாவும் வரம் வேண்டும் என்று வேண்டினர். சற்றும் யோசிக்காமல், பிரம்மதேவரும் வரம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT