Published : 06 Mar 2025 06:24 AM
Last Updated : 06 Mar 2025 06:24 AM
பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களுள் அருணகிரிநாதரும் ஒருவர். திருவண்ணாமலைத் திருத்தலத்தில் கிபி 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாகப் பெற்ற இவர், ஆறுமுகப் பெருமானுக்கு திருப்புகழ், திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தர் அநுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய 6 நூல்களை படைத்தருளினார்.
இவற்றில் மிகவும் சிறிய அளவில் கந்தர் அநுபூதி இருந்தாலும், பொருளில் பெரியது. கந்தன் என்ற சொல்லுக்கு பகைவர்களின் ஆற்றலை வற்றச் செய்பவர், ஆறுருவும் ஒன்றாய் இணைந்தவர், ஆன்மாக்களுக்கு பற்றுக் கோடாய்த் திகழ்பவர் என்று பொருள் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT