Published : 06 Mar 2025 06:24 AM
Last Updated : 06 Mar 2025 06:24 AM

ப்ரீமியம்
குரு​வாய் வரு​வாய் அருள்​வாய் குக​னே!

பாரத தேசத்​தில் வாழ்ந்த மகான்​களுள் அருணகிரி​நாதரும் ஒரு​வர். திரு​வண்​ணா​மலைத் திருத்​தலத்​தில் கிபி 15-ம் நூற்​றாண்​டில் வாழ்ந்​து, முரு​கப் பெரு​மானின் அருளை பரிபூரண​மாகப் பெற்ற இவர், ஆறு​முகப் பெரு​மானுக்கு திருப்​பு​கழ், திரு​வகுப்​பு, கந்​தரந்தா​தி, கந்​தர் அநுபூ​தி, கந்​தரலங்​காரம், வேல் விருத்​தம், மயில் விருத்​தம் முதலிய 6 நூல்​களை படைத்​தருளி​னார்.

இவற்​றில் மிக​வும் சிறிய அளவில் கந்​தர் அநுபூதி இருந்​தா​லும், பொருளில் பெரியது. கந்​தன் என்ற சொல்​லுக்கு பகைவர்​களின் ஆற்​றலை வற்​றச் செய்​பவர், ஆறுரு​வும் ஒன்​றாய் இணைந்​தவர், ஆன்​மாக்​களுக்கு பற்​றுக் கோடாய்த் திகழ்​பவர் என்று பொருள் கொள்​ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x