Published : 27 Feb 2025 06:25 AM
Last Updated : 27 Feb 2025 06:25 AM

ப்ரீமியம்
கெருகம்பாக்கம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் | கேது தோஷம் நீக்கும்

கெருகம்பாக்கம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், கேது பகவானின் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இத்தலத்தில் எமகண்ட நேரத்தில் காலை 9 முதல் 10.30 வரை ஸ்ரீகேது பகவான் பரிகார ஹோமம் நடைபெறுகிறது. சென்னை அருகே போரூர் - குன்றத்தூர் சாலையில் கெருகம்பக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் ‘ஆதி காமாட்சி’ தரிசனம் நமக்கு கிடைக்கும்.

இடதுபுறம் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதியை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீ நீலகண்டேஸ்வரரை தரிசிக்கலாம். பெரிய பாணத்தோடு அருள்பாலிக்கிறார். இந்த பாணம் ஸ்ரீ கேது பகவானின் தலையாக கூறப்படுகிறது. ஆவுடையாருக்கு கீழே நீர்விழும் இடத்தில் கேது பகவானின் வால் பகுதி இருப்பதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஈசனை வழிபட்டால், அவரே கேது தோஷத்தை முற்றிலும் நீக்குவதாக ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x