Published : 06 Feb 2025 06:00 AM
Last Updated : 06 Feb 2025 06:00 AM
ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்து காட்டிய பரம்பொருள் ஸ்ரீராமபிரான். சரணம் என்று வந்தவர்களுக்கு அபயம் அளிப்பவர் ஸ்ரீராமபிரான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாக்கு தவறாதவராக இருந்து, தீயவர்களை ஒரு வில்லால் வீழ்த்தி, ஜென்மம் முழுவதும் மகாலட்சுமியுடன் பயணித்து இல் வாழ்க்கையில் சிறந்து விளங்கியவர். பாரத தேசம் முழுவதும் அவர் திருவடிகள் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கம்பரால் தமிழில் எழுதப்பட்ட ராமாயணம், தலை சிறந்ததோர் இலக்கியமாகப் போற்றப்படுகிறது. அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களில் ராமபிரான் போற்றப்படுகிறார். தமிழகத்தின் மதுரைப் பகுதியை ஆட்சி புரிந்த மதுரை நாயக்கர்கள் காலநாணயங்களில் வில் அம்புடன் நின்ற நிலையில் உள்ள ராமர் உருவம் பதித்திருப்பதைக் காணலாம். ராமபிரான் பெயரிலேயே தாய்லாந்து மன்னர்களின் பெயர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT