Published : 16 Nov 2023 06:21 AM
Last Updated : 16 Nov 2023 06:21 AM
யேசு மக்களுக்கு போதனை செய்ய ஆரம்பித்திருந்த நாள்களில் கலிலேயா என்ற பகுதியில் இருந்த கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. யேசுவின் தாயாரும் அந்தத் திருமண வீட்டில் இருந்தார். யேசுவும் அவருடைய சீடர்களும் அத்திருமணத்திற்கு அழைக்கப் பெற்றிருந்தனர். திருமண வீடுகளில் உயர்ரக திராட்சை ரசம் பரிமாறுவது யூதர்களின் வழக்கம். திருமண வீட்டில் திராட்சை ரசம் குறைவுபட்டாலோ அல்லது அனைவருக்கும் கிடைக்காமல் தீர்ந்து போனாலோ அது திருமண வீட்டாருக்கு மிகப்பெரிய அவமானமாக கருதப்படும்.
அன்றைய திருமண விழாவில் திராட்சை ரசம் எதிர்பாராத விதமாக தீர்ந்து போனது. யேசுவின் தாய் யேசுவிடம் வந்து, “திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது” என்றார். யேசுவோ தன் தாயாரிடம், “அம்மா, அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அற்புதம் செய்ய நேரம் இன்னும் எனக்கு வரவில்லையே” என்றார். ஆனாலும், யேசு நிச்சயம் ஓர் அற்புதத்தைச் செய்வார் என்று நம்பிய யேசுவின் தாய், பணியாளரிடம் யேசுவைக் காட்டி, “அவர் உங்களுக்குச் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்” என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT