Published : 09 Apr 2019 07:48 PM
Last Updated : 09 Apr 2019 07:48 PM
சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 23வது ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸில் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது. தினேஷ் கார்த்திக் தலைமை அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முதலில் பவுல் செய்வது நல்லது என்று லஷ்மண் சிவராம கிருஷ்ண்டன் தன் பிட்ச் அறிக்கையில் தெரிவித்தார்.
சென்னையில் கொல்கத்தா அணி சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடிய 8 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே வென்றுள்ளது.
ஆட்டம் பற்றிய பேச்சு, சுவாரஸ்யம் முழுதும் ஆந்த்ரே ரஸல் மீண்டும் சிக்சர் மழை பொழிவாரா, அல்லது தோனி அவரை ‘ஸ்மார்ட்’ ஆக வீழ்த்தி விடுவாரா என்பதைப் பற்றியே உள்ளது.
அதிரடி வீரர்களுக்கு எதிராக தோனி தன் கேப்டன்சியில் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார், இதுவரை பெரிய அளவுக்கு தோனி கேப்டன்சியில் பெரிய அதிரடி வீரர்கள் பெரிய அளவில் சோபித்ததில்லை என்றே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT