Published : 17 Nov 2025 09:36 AM
Last Updated : 17 Nov 2025 09:36 AM
புதுடெல்லி: டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதே பிரிவில் இந்திய வீரர் முகமது முர்டாஸா வனியா 250.1 புள்ளிகளுடன் 2-வது இடம்பெற்று வெள்ளியை வென்றார். கொரியா வீரர் பேக் செயுங்காக் 223.6 புள்ளிகளுடன் 3-வது இடத்தைக் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT