Published : 16 Nov 2025 10:21 AM
Last Updated : 16 Nov 2025 10:21 AM

மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர்.

சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம், திண்​டுக்​கல் புனித மரியன்னை மேல்​நிலைப் ​பள்ளி முன்​னாள் மாணவர்​கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவி​லான பள்ளி மாணவர்​களுக்​கான கால்​ பந்​துப் போட்​டியை நடத்​தின. இதில் நேற்று நடைபெற்ற இறு​திப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யும், கோவை பயோனியர் மில்ஸ் அணி​யும் மோதின.

இதில் மதுரை அணி 2-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று டாக்​டர் சேவியர் பிரிட்டோ எக்​ஸ்பி குரூப்ஸ் சேலஞ்​சர்ஸ் கோப்​பையை வென்றது. மதுரை அணிக்​காக சூர்​யா, பரத் ஆகியோர் தலா ஒரு கோலடித்​தனர். பரிசளிப்பு விழா​வில் திண்​டுக்​கல் மாவட்ட கால் பந்து கழக தலைவர் ஜி.சுந்​தர ​ராஜன், பள்​ளித் தாளாளர் மரிய ​நாதன், செயின்ட் மேரி மாணவர் கழக பாது​காவலர் எஸ்​.கே.சி.குப்​பு​சாமி உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x