Published : 13 Nov 2025 09:46 AM
Last Updated : 13 Nov 2025 09:46 AM
சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது.
இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர்.
90 நிமிடங்களின் முடிவில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 11-வது நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் ஜெர்மையா சுயகோல் அடித்தார். எனினும் அதன் பின்னர் தமிழ்நாடு அணி கோல் வாங்காமல் பார்த்துக் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT