Published : 13 Nov 2025 09:46 AM
Last Updated : 13 Nov 2025 09:46 AM

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து தொடர்: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்

சென்னை: ஆடவருக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வந்தது.

இதன் இறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சார்பில் 13-வது நிமிடத்தில் சவுவிக் ஹால்டரும், 45+1-வது நிமிடத்தில் அபிட்நேகோவும் கோல் அடித்து அசத்தினர்.

90 நிமிடங்களின் முடிவில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 11-வது நிமிடத்தில் தமிழ்நாடு அணியின் ஜெர்மையா சுயகோல் அடித்தார். எனினும் அதன் பின்னர் தமிழ்நாடு அணி கோல் வாங்காமல் பார்த்துக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x