Published : 11 Nov 2025 11:22 AM
Last Updated : 11 Nov 2025 11:22 AM

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை: மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

புதுடெல்லி: உடற்​ தகு​தி விஷ​யத்​தை பொறுத்​தவரை டி20 உலகக்​ கோப்​பை தொடருக்​கு இந்​தி​ய கிரிக்​கெட்​ அணி இன்​னும்​ தயா​ராக​வில்​லை என பயிற்​சி​யாளர்​ கவுதம்​ கம்​பீர்​ தெரி​வித்​துள்​ளார்​.

இதுதொடர்பாக கவுதம் கம்​பீர் பிசிசிஐ.டிவி இணை​யதளத்​துக்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: வீரர்​களின் ஓய்​வறை வெளிப்​படை​யாக​வும் நேர்​மறை​யான இடமாக​வும் அமைந்​துள்​ளது. இது இப்​படி​தான் இருக்க வேண்​டும் என நாங்​கள் விரும்​பு​கிறோம். டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில் உடற்​தகு​தி​யைப் பொறுத்​தவரை நாங்​கள் இன்​னும் இருக்க விரும்​பும் இடத்தில் இல்லை என்றே நினைக்​கிறேன். இதுதொடர்​பாக அணி வீரர்​களு​டன் உரை​யாடி உள்​ளேன். இந்த விஷ​யத்​தில் உறு​தி​யாக இருக்க விரும்​பு​கிறோம்.

வீரர்​கள் அனை​வரும் உடற்​தகு​தி​யுடன் இருக்க வேண்​டும் என விரும்​பு​கிறோம். நாம் உடல் ரீதி​யாக வலிமை​யாக இருந்​தால், மன ரீதி​யாக​வும் உறு​தி​யானவர்​களாக மாறுகிறோம். உயர் அழுத்த சூழ்​நிலைகளில், உடல் தகுதி நேரடி​யாக நமது மன உறு​திக்கு பங்​களிக்​கிறது, இது மிக முக்​கிய​மான நேரங்​களில் சிறப்​பாக செயல்பட அனு​ம​திக்​கிறது. உலகக் கோப்பை தொடருக்கு இன்​னும் 3 மாதங்​கள் உள்​ளன. அதற்​குள் நாங்​கள் விரும்​பும் இடத்​தில் இருக்க வேண்​டும்.

ஏராள​மானோர் தற்​போதைய இந்​திய டி20 அணியை ஆக்​ரோஷ​மான பேட்​டிங் வரிசை​யாகக் கருதுகிறார்​கள். என்னை பொறுத்​தவரை​யில் பந்​து​வீச்​சில் ஆசிய கோப்பை தொடரில் முதல் 6 ஓவர்​களில் ஜஸ்​பிரீத் பும்​ராவை 3 ஓவர்​கள் வீசச் செய்​ததே ஆக்​ரோஷ​மான செய​லாக நினைக்​கிறேன். ஆக்​ரோஷ​மான பேட்​டிங் வரிசையை கொண்ட அணி என்று மட்​டுமே அழைக்​கப்​படும் அணி​யாக நாங்​கள் இருக்க விரும்​ப​வில்​லை, ஒட்​டுமொத்​த​மாக அனைத்து துறை​யிலும் ஆக்​ரோஷ​மான அணி​யாக இருக்க விரும்​பு​கிறோம்.

பவர்​பிளே​வில் பும்ரா 3 ஓவர்​களை வீசச் செய்​தது நல்ல பலனை கொடுத்​தது. பெரும்​பாலான நேரங்​களில் பவர்​பிளே​வில் வெற்​றிகர​மாக செயல்​பட்​டோம். மேலும் நடுஓவர்​களில் வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ் சுதந்​திர​மாக பந்​து​வீச​வும், விக்​கெட்​களை வீழ்த்​த​வும் அதிக வாய்ப்​பு​களை கொடுத்​தது. ஆல்​ர​வுண்​டர்கள் அணி​யில் அதி​கம் இருப்​பது மிக​வும் முக்​கி​யம். கடந்த காலங்​களில் பந்​து வீச்சு தேர்​வில் 6 பேர் மட்​டுமே இருந்தனர். ஆனால் தற்​போது 7 அல்​லது 8 பேர் உள்​ளனர்.

வாஷிங்​டன் சுந்​தரும், அக்​சர் படேலும் துணைக் கண்​டங்​களில் மட்​டும் சிறப்​பாக செயல்​படும் திறமை கொண்​ட​வர்​கள் கிடை​யாது. அனைத்து இடங்​களி​லும் சிறப்​பாக செயல்​படும் திறன் அவர்​களிடம் உள்​ளது. இதனால் தான், கடந்த 7 அல்​லது 8 மாதங்​களில் வாஷிங்​டன் சுந்​தரின் பந்​து​
வீச்சு பெரிய வெற்​றி​யாக அமைந்​துள்​ளது.

அக்​சர் படேல் சாம்​பியன்ஸ் டிராபி​யில் 5-வது இடத்​தில் பொறுப்​புடன் பேட்​டிங் செய்​தார். விதி​விலக்​காக அவர், சிறப்​பாக செயல்​பட்​டார், பந்​து​வீச்​சில் கடின​மான ஓவர்​கள் வீசி​னார். பவர்​பிளே மற்​றும் நடு ஓவர்களி​லும் பந்து வீசி​னார்​. இவ்​வாறு கவுதம்​ கம்​பீர்​ கூறி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x