Published : 11 Nov 2025 10:47 AM
Last Updated : 11 Nov 2025 10:47 AM

டெல்லி ஸ்டேடியத்தை 102 ஏக்கரில் விளையாட்டு நகரமாக மாற்ற திட்டம்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்பட உள்​ளது. அதற்கு பதிலாக அதிநவீன வசதி​களு​டன் 102 ஏக்​கரில் விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது.

மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகத்​தின் அதி​காரப்​பூர்வ தகவலின்​படி, ஐவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் இடிக்​கப்​பட்​டு, அனைத்து முக்​கிய விளை​யாட்​டுப் பிரிவு​களுக்​கும் மைதானங்​கள், வீரர்​களுக்​கான குடி​யிருப்பு வசதி​கள் கொண்ட ஒரு விளை​யாட்டு நகரம் உரு​வாக்​கப்​படு​கிறது. எனினும் இந்​தத் திட்​டம் இன்​னும் ஆரம்​பகட்ட யோசனை நிலை​யிலேயே உள்​ளது.

இந்​தத் திட்​டத்​திற்​காக உலகம் முழு​வ​தி​லும் இது போன்ற திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு மாதிரி​களை அரசு ஆய்வு செய்து வரு​கிறது. இந்த வகை​யில் கத்​தார் மற்​றும் ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள விளை​யாட்டு நகரங்​கள் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. மத்​திய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா சமீபத்​தில் தோகா​வில் உள்ள விளை​யாட்டு நகரத்தை பார்​வை​யிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

1982-ம் ஆண்டு டெல்​லி​யில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​காக ஜவஹர்​லால் நேரு ஸ்டேடி​யம் கட்​டப்​பட்​டது. 60 ஆயிரம் இருக்​கைகள் கொண்ட இந்த மைதானத்​தில் கடந்த 2010-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகள் மற்​றும் 2017-ம் ஆண்டு யு-17 ஃபிபா உலகக் கோப்பை போட்​டிகள் நடை​பெற்​றுள்​ளன.

2010-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​காக மைதானம் ரூ.961 கோடி செல​வில் புதுப்​பிக்​கப்​பட்​டது. சமீபத்​தில், இந்த மைதானத்​தில் உலக பாரா தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதற்காக ரூ.50 கோடி செலவில் மைதானம் சீரமைக்கப்பட்டு இருந்தது.

தற்​போது மைதான வளாகத்​தில் கால்​பந்து மைதானம், தடகளப் பாதை தவிர, வில்​வித்தை அகாட​மி, பாட்​மிண்​டன் ஆடு​களங்​கள், இந்​திய விளை​யாட்டு ஆணை​யத்​தின் அலு​வல​கம், தேசிய ஊக்​க மருந்து தடுப்பு முகமை மற்​றும் தேசிய ஊக்​க மருந்து பரிசோதனை ஆய்​வகம் ஆகியவை உள்​ளன. விளை​யாட்டு நகரம் தொடங்​கப்​படு​வதற்​கான பணி​கள் தொடங்​கிய​வுடன் இந்த அலு​வல​கங்​களும் இடமாற்​றம் செய்​யப்​படும். அதே​போல் முக்​கிய மைதான​மும் இடிக்​கப்​படும்.

குடி​யிருப்பு வளாகங்​கள் கட்​டப்​படும். இதனால் போட்​டி​யில் வரும் வீரர், வீராங்​க​னை​கள் இங்​கேயே தங்​கு​வதற்​கான வசதி​களும் ஏற்​படுத்​தப்​படும். மைதான வளாகத்​தின் 102 ஏக்​கர் பரப்​பளவை​யும் பயன்​படுத்​திக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. ஏனெனில் தற்​போது 100 ஏக்​கர் பரப்​பளவு விளை​யாட்​டுக்கு உகந்த அளவில் பயன்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது.

டெல்லி மைதான வட்​டாரங்கள் கூறும்​போது, “தற்​போது இது ஒரு யோசனை​தான், ஆனால் சாத்​தி​யக்​கூறு ஆய்வு எவ்​வாறு செயல்​படு​கிறது என்​பதை பார்க்​கவேண்​டும். ஆனால்​ மத்​தி​ய விளை​யாட்​டுத்​துறை அமைச்​சகம்​ மிக​வும்​ தீவிர​மாக உள்​ளது” என்று தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x