Published : 11 Nov 2025 10:21 AM
Last Updated : 11 Nov 2025 10:21 AM
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். 8 சுற்றுகளை கொண்ட இந்தத் தொடரில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 4-வது சுற்று இன்று நடைபெறுகிறது.
நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடரில் 4-வது சுற்றில் விளையாடுவதற்கு இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, வி.பிரணவ், வி.கார்த்திக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் 4-வது சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் டேனியல் துபோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரியின் பீட்டர் லேகோவுடன் மோதுகிறார். பி.ஹரிகிருஷ்ணா, சுவீடனின் நில்ஸ் கிராண்டேலியஸுடனும் வி.பிரணவ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவுடனும் வி.கார்த்திக், வியட்நாமின் லெ குவாங் லீமுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT