Published : 10 Nov 2025 10:19 AM
Last Updated : 10 Nov 2025 10:19 AM

ஆர்​சிபி கேப்​டன் ரஜத் பட்​டி​தார் காயம்

போபால்: இந்​திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) ஐபிஎல் அணி​யின் கேப்​ட​னு​மான ரஜத் பட்​டி​தார் காயம் அடைந்​துள்​ளார்.

நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி​யில் ரஜத் பட்டி​தார் இடம் பிடித்​திருந்​தார்.

முதல் போட்​டி​யில் விளை​யாடும்​போது, ரஜத் பட்​டி​தா​ருக்கு காயம் ஏற்​பட்​டது. அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவருக்கு காயம் குண​மாக சுமார் 4 மாதங்​களாகும் எனத் தெரி​வித்​துள்​ளனர்.

இதனால் எஞ்​சிய ரஞ்சி போட்​டிகளில் அவரால் விளை​யாட முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்​கெட் லீக் தொடர் மார்ச் இறுதி அல்​லது ஏப்​ரல் மாத தொடக்​கத்​தில் தொடங்​க​வுள்​ளது. ஐபிஎல் போட்​டிக்கு முன்​ன​தாக ரஜத் பட்​டி​தார் தயா​ராகி விடு​வார் என மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x