Published : 10 Nov 2025 10:19 AM
Last Updated : 10 Nov 2025 10:19 AM
போபால்: இந்திய ஏ அணி வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் கேப்டனுமான ரஜத் பட்டிதார் காயம் அடைந்துள்ளார்.
நடுவரி வரிசை ஆட்டக்காரன ரஜத் பட்டிதார், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணியில் ரஜத் பட்டிதார் இடம் பிடித்திருந்தார்.
முதல் போட்டியில் விளையாடும்போது, ரஜத் பட்டிதாருக்கு காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு காயம் குணமாக சுமார் 4 மாதங்களாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் எஞ்சிய ரஞ்சி போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக ரஜத் பட்டிதார் தயாராகி விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT