Published : 09 Nov 2025 10:53 AM
Last Updated : 09 Nov 2025 10:53 AM
விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்டத்தில் நேற்று ஆந்திராவுடன் மோதியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக வித்யூத் 40, சந்தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்கள் சேர்த்தனர். விமல்குமார் 10, பாலசுப்ரமணியம் சச்சின் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8, ஆந்த்ரே சித்தார்த் 0, கேப்டன் சாய் கிஷோர் 8, திரிலோக் நாக் 4 ரன்களில் நடையை கட்டினர்.
41.5 ஓவர்களில் இந்திய அணி 103 ரன்களுக்கு 9 விக்கெட்களை பறிகொடுத்தது. கடைசி விக்கெட்டுக்கு வித்யூத், சந்தீப் வாரியர் ஜோடி 79 ரன்கள் சேர்த்ததால் 180 ரன்களை கடக்க முடிந்தது. ஆந்திரா அணி சார்பில் பிரித்வி ராஜ் 4, சவுரப் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த ஆந்திரா அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் சேர்த்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT