Published : 08 Nov 2025 10:44 AM
Last Updated : 08 Nov 2025 10:44 AM
பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தத் தொடரில் நேற்று 3-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதீன் வோகிடோவுடன் மோதினார். இதில் அர்ஜூன் எரிகைசி 30-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா, பெல்ஜியம் கிராண்ட் மாஸ்டரான டேனியல் தர்தாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஹரிகிருஷ்ணா 25-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT