Published : 08 Nov 2025 10:45 AM
Last Updated : 08 Nov 2025 10:45 AM
சென்னை: சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி நேற்று புதுச்சேரி அணியுடன் மோதியது. இதில் தமிழக அணி 15-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தமிழக அணி சார்பில் பி டுடே 4 கோல்கள் அடித்து அசத்தினார். சவுவிக் ஹால்டர் 3 கோல்களையும், முகமது ரிஹான் 2 கோல்களையும் அடித்து பலம் சேர்த்தனர். குஞ்சாபு நிகில் தேஜ், ஜாக்ரோமாரியோ, முகமது அஸ்லான் லாண்ட்ஜ், ஆர்.ரோஷன், அபிட்நேகோ, கே.ரோஷன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT