Published : 08 Nov 2025 09:49 AM
Last Updated : 08 Nov 2025 09:49 AM
பைசலாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குயிண்டன் டி காக்கின் அதிரடி சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சல்மான் ஆகா 69, முகமது நவாஷ் 59, சைம் அயூப் 53 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நந்த்ரே பர்கர் 4, காபாயோம்ஸி பீட்டர் 3, கார்பின் போஷ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
270 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தனது 22-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 119 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மேத்யூ பிரீட்ஸ்கே 17 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக லூஹான் டி பிரிட்டோரியஸ் 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், டோனி டி ஸோர்ஸி 63 பந்துகளில், 3 சிக்ஸ்ர்கள், 9 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது.
கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT