Published : 06 Nov 2025 08:03 AM
Last Updated : 06 Nov 2025 08:03 AM

நெபோம்னியாச்சியை வீழ்த்தினார் திப்தாயன்

பஞ்சிம்: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. 82 நாடுகளை சேர்ந்த 206 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரின் 2-வது சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திப்தாயன் கோஷ் 46-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஹரிகிருஷ்ணா, ரஷ்யாவின் ஆர்செனி நெஸ்டெரோவை 29-வது நகர்த்தலின் போது வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் உலக ஜூனியர் சாம்பியனான இந்தியாவின் வி.பிரணவ், நார்வே வீரர் ஆர்யன் தரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x