Published : 04 Nov 2025 09:58 AM
Last Updated : 04 Nov 2025 09:58 AM

‘கடவுளின் திட்டம்’ - மனம் திறக்கும் ஷபாலி வர்மா | Women’s WC

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​துள்​ளது இந்​திய அணி. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெரு​மை​யை​யும் பெற்​றுள்​ளது.

இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றி​யில் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்​மா​வின் மட்டை வீச்​சும் பிர​தான பங்கு வகித்​தது. 78 பந்​துகளை சந்​தித்த அவர், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் அதிக ரன்​கள் விளாசிய இளம் வீராங்​கனை என்ற சாதனையை​யும் அவர், படைத்​தார்.

பேட்​டிங்​கில் அபார​மாக செயல்​பட்ட ஷபாலி வர்​மா, பந்​து​வீச்​சிலும் நெருக்​கடி​யான தருணத்​தில் 2 விக்​கெட்​களை வீழ்த்தி திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுத்​திருந்​தார். 299 ரன்​களை விரட்​டிய தென் ஆப்​பிரிக்க அணி ஒரு கட்​டத்​தில் 20 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 113 ரன்​கள் குவித்து வலு​வாக இருந்​தது. அப்​போது ஷபாலி வர்மா சுனே லூஸ், மரிஸான் காப் ஆகியோரை தனது அடுத்​தடுத்த ஓவர்​களில் ஆட்​ட​மிழக்​கச் செய்து ஆட்​டத்​தின் போக்கை இந்​திய அணி​யின் பக்​கம் இழுத்​துக் கொண்​டு​வந்​தார்.

இத்​தனைக்​கும் ஷபாலி வர்​மா, உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி அறிவிக்​கப்​பட்ட போது அவரது பெயர் இல்​லாமலேயே இருந்​தது. மோச​மான பார்ம் காரண​மாக அவருக்கு அணி​யில் இடம் கிடைக்​க​வில்​லை. மாறாக அந்த நேரத்​தில் சீராக ரன்​கள் சேர்த்து வந்த பிர​திகா ராவல் தொடக்க வீராங்​க​னை​யாக தேர்​வாகி இருந்​தார். லீக் சுற்​றில் பிர​திகா ராவல், நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான முக்​கிய​மான ஆட்​டத்​தில் சதம் விளாசி அசத்​தி​யிருந்​தார். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக வங்​கதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பீல்​டிங்​கின் போது காயம் அடைந்து தொடரில் இருந்து வில​கி​னார் பிர​திகா ராவல். இதன் காரண​மாகவே 21 வயதான ஷபாலி வர்​மாவுக்கு வாய்ப்பு கிடைத்​தது.

அப்​போது ஹரி​யானா அணிக்​காக சூரத் நகரில் நடை​பெற்ற டி20 தொடருக்​காக ஷபாலி வர்மா தீவிர​மாக தயா​ராகி வந்​தார். இந்​திய அணி​யில் இருந்து உடனடி​யாக அழைப்பு வந்​ததும் நவி​மும்பை புறப்​பட்​டுச் சென்ற அவர், அங்​குள்ள பல்​கலைக்​கழக மைதானத்​தில் தீவிர பேட்​டிங் பயிற்சி செய்​தார். அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக களமிறங்​கிய ஷபாலி வர்மா 10 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தார். ஆனால் இறு​திப் போட்​டி​யில் பேட்​டிங், பந்​து​வீச்சு என இரண்​டிலும் அற்​புத​மாக செயல்​பட்டு இந்​திய அணி வரலாற்று சாதனை நிகழ்த்​து​வதற்கு உறு​துணை​யாக இருந்​தார்.

இறு​திப் போட்​டிக்கு பின்​னர் ஷபாலி வர்மா கூறிய​தாவது: அரை இறு​திக்கு முன்பு எனக்கு அழைப்பு வந்​த​போது, நான் உண்​மை​யிலேயே அதிர்ச்​சி​யடைந்​தேன். கடைசி நிமிடத்​தில் இது​போன்ற வாய்ப்பு கிடைப்​பது அடிக்​கடி நடப்​ப​தில்​லை. விஷ​யங்​களை எளிமை​யாக வைத்​துக்​கொண்டு அந்த தருணத்தை அனுபவிக்க வேண்​டுமென எனக்​குள் நானே கூறிக் கொண்​டேன். இறு​திப் போட்​டி​யில் ரன்​கள் எடுத்​ததும், விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யதும், ஒரு கனவு நனவாகியது போல் உணர்ந்​தேன். இதெல்​லாம் கடவுளின் திட்​டம் என்று நான் உண்​மை​யிலேயே நம்​பு​கிறேன்.

நான் அணி​யில் மீண்​டும் இணைந்த நாளி​லிருந்​து, எல்​லோரும் என்னை இங்​கேயே நீண்ட காலம் இருந்​ததை போல உணர வைத்​தனர். தலைமை பயிற்​சி​யாளர் அமோல் மஜூம்​தார், கேப்​டன் ஹர்​மன்ப்​ரீத் கவுர் ஆகியோர் பயமின்றி விளை​யாடுங்​கள், இயல்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​துங்​கள், தவறுகளைப் பற்றி கவலைப்பட வேண்​டாம் என்று என்​னிடம் கூறி​னார். அந்த சுதந்​திரம் எனக்கு மிகுந்த நம்​பிக்​கை​யைத் தந்​தது. சக வீராங்​க​னை​கள் அனை​வரும் ஒரு​வருக்​கொரு​வர் ஆதர​வளித்​தனர். யாராவது சோர்​வாக இருந்​தால், மற்​றவர்​கள் அவர்​களை உற்​சாகப்​படுத்​து​வார்​கள். அது​தான் இந்த அணியை மிக​வும் சிறப்​பான​தாக்​கியது.

ஆரம்​பத்​தில் நான் அணிக்கு தேர்வு செய்​யப்​ப​டாதது வேதனை​யாக இருந்​தது. அதேவேளை​யில் அணி​யில் உள்ள வீராங்​கைனை​கள், ‘நீ திரும்பி வரு​வாய், தயா​ராக இரு’ என்று என்​னிடம் தொடர்ந்து கூறி வந்​தனர். அவர்​களிட​மிருந்​தும் என் குடும்​பத்​தினரிட​மிருந்​தும் கிடைத்த அந்த நம்​பிக்கை என்​னைத் தொடர்ந்து வழிநடத்​தி​யது. அதுவே இப்​போது உலகக் கோப்பை வெற்​றி​யாள​ராக இங்கே நிற்​க​வைத்​துள்​ளது.

அரை இதி​யில் ஆஸ்​திரேலி​யாவை வீழ்த்​தி​யது எங்​களுக்கு மிகப்​பெரிய ஊக்​கத்தை அளித்​தது. நாங்​கள் அவர்​களிடம் பலமுறை தோற்​றிருக்​கிறோம், அதனால் அந்த வெற்றி எல்​லா​வற்​றை​யும் மாற்​றியது. ஒவ்​வொரு வீராங்​க​னை​யும் இறு​திப் போட்​டி​யில், குறிப்​பாக மைதானத்​தில் தங்​களால் முடிந்த
அனைத்​தை​யும் வெளிப்​படுத்​தினர். அது​தான் இந்த வெற்​றியை மிக​வும் உணர்ச்​சிவசப்​படுத்​தி​யது மற்​றும் எங்​கள் அனை​வருக்​கும் மிக​வும் சிறப்பு வாய்ந்​த​தாக மாற்​றியது. இவ்​​வாறு ஷ​பாலி வர்​​மா கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x