Published : 03 Nov 2025 11:42 AM
Last Updated : 03 Nov 2025 11:42 AM

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தேர்வு

சென்னை: தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கத் தலை​வ​ராக(டிஎன்​சிஏ) டி.ஜே.ஸ்ரீநி​வாச​ராஜ் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார்.

தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்க புதிய நிர்​வாகி​களை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் நேற்று சென்னை சேப்​பாக்​கத்​தி​லுள்ள எம்​.ஏ.சிதம்​பரம் கிரிக்​கெட் மைதான வளாகத்​தில் நடை​பெற்​றது. தேர்​தல் அதி​காரி​யாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதி​காரி டி.சந்​திரசேகரன் செயல்​பட்​டார். சங்க உறுப்​பினர்​கள் வாக்​களித்து முடித்த நிலை​யில் வாக்​கு​கள் எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.

முன்​னதாக, டிஎன்​சிஏ தலை​வ​ராக டி.ஜே.ஸ்ரீநி​வாச​ராஜ் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார். எம்​.குமரேஷ் துணைத் தலை​வ​ராக​வும், ஆர். ரங்​க​ராஜன் கவுரவ செயல​ராக​வும் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டனர். தேர்​தல் மூலம் கவுரவ செயல​ராக யு.பகவன்​தாஸ் ராவ், கவுரவ இணைச் செயல​ராக கே.​ராம், கவுரவ உதவி செயல​ராக சி.​மாரீஸ்​வரன் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

அபெக்ஸ் கவுன்​சில் உறுப்​பினர்​களாக ஆர்​.கிருஷ்ணா, ஜி.மணி​கண்​டன், பி.எஸ்​.​ராஜன், சஞ்​சய் கும்​பட், எஸ்​.செல்​வ​மணி, என்​.எஸ்​.சங்​கர் தேர்வு செய்​யப்​பட்​டனர். புதிய நிர்​வாகி​கள் 2025-2028 காலம் வரை பதவி​யில் இருப்​பர். இத்​தகவல் டிஎன்​சிஏ வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x