Published : 03 Nov 2025 11:42 AM
Last Updated : 03 Nov 2025 11:42 AM
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக(டிஎன்சிஏ) டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.சந்திரசேகரன் செயல்பட்டார். சங்க உறுப்பினர்கள் வாக்களித்து முடித்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முன்னதாக, டிஎன்சிஏ தலைவராக டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எம்.குமரேஷ் துணைத் தலைவராகவும், ஆர். ரங்கராஜன் கவுரவ செயலராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் மூலம் கவுரவ செயலராக யு.பகவன்தாஸ் ராவ், கவுரவ இணைச் செயலராக கே.ராம், கவுரவ உதவி செயலராக சி.மாரீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அபெக்ஸ் கவுன்சில் உறுப்பினர்களாக ஆர்.கிருஷ்ணா, ஜி.மணிகண்டன், பி.எஸ்.ராஜன், சஞ்சய் கும்பட், எஸ்.செல்வமணி, என்.எஸ்.சங்கர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் 2025-2028 காலம் வரை பதவியில் இருப்பர். இத்தகவல் டிஎன்சிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT