Published : 30 Oct 2025 07:54 AM
Last Updated : 30 Oct 2025 07:54 AM
பெங்களூரு: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி, இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
4 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 3 மாதங்களுக்கு பிறகு களமிறங்க உள்ளார்.
இந்த இரு போட்டிகளையும் அவர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT