Published : 30 Oct 2025 07:43 AM
Last Updated : 30 Oct 2025 07:43 AM
டொராண்டோ: கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், நடப்பு சாம்பியனும் உலகத் தரவரிசையில் 7-வது இடமும் வகிக்கும் பெல்ஜியத்தின் டின்னே கிலிஸுடன் மோதினார்.
36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனஹத் சிங் 12-10, 11-9, 11-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை அனஹத் சிங் வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT